தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 75,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 48,88,312 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கபப்ட்டோர் எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உள்ளது. தற்போது 52,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 96 பேர் உயிரிழந்தனர். அதில், 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 61 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,418 ஆக அதிகரித்துள்ளது.