தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 78 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 லட்சத்து 35 ஆயிரத்து 645 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 3,835 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா குணமடைந்து 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 75 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.