தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 4,731 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 76 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 48,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 79 ஆயிரத்து 499 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், திருவள்ளூரில் 370 பேருக்கும், செங்கல்பட்டில் 323 பேருக்கும், வேலூரில் 191 பேருக்கும், மதுரையில் 185 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தமிழகத்தில் இன்று மட்டும் 3,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 49,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 64 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது.