உலகம்
இந்திய வீரருடன் விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தில் 14 நாட்கள் ஆய்வு!
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ - நாசா - ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது.
ஆனால், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1984-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றிருந்தார். இவர் சோவியத் யூனியனின் உதவியோடு சோயுஸ் விண்கலம் மூலமாக ராகேஷ் சர்மா 1984-ல் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ராகேஷ் சர்மாவுக்குப் பின் 40 ஆண்டுகள் கழித்து இந்தியா சார்பில் சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார்.
Also Read
-
”டெல்லி அடிமை அதிமுக வரும் தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கக்கூடாது!” :தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு!
-
”பாஜக-வின் கொள்கை பொது சிவில் சட்டம்.. உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி”: முரசொலி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!