உலகம்
"செயற்கை நுண்ணறிவுவால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது" - எலான் மஸ்க் எச்சரிக்கை !
மனிதனின் பரப்பரப்பான வாழ்வில் தனக்கான வசதிகள் நிறைந்த வாழ்விற்காக, உதவ பலவிதமான தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் தொழில்நுட்பம்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. எனினும் இந்த தொழில்நுட்பம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்கால உலகமே மாறிவிடும்.
எதிர்காலத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சமாகிவிடும்.
எனினும் நான் அப்போதும் மனிதர்கள் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். கணினியும், ரோபோக்களும் செயற்கை நுண்ணறிவாழ் நம்மைவிட வேலைகளை சிறப்பாகச் செய்யும் என்றால் நம் பங்கு என்னவாக இருக்கும் எந்த கேள்வி எழுகிறது. எனினும் நாம் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம் என நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!