உலகம்
"செயற்கை நுண்ணறிவுவால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது" - எலான் மஸ்க் எச்சரிக்கை !
மனிதனின் பரப்பரப்பான வாழ்வில் தனக்கான வசதிகள் நிறைந்த வாழ்விற்காக, உதவ பலவிதமான தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் தொழில்நுட்பம்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. எனினும் இந்த தொழில்நுட்பம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்கால உலகமே மாறிவிடும்.
எதிர்காலத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சமாகிவிடும்.
எனினும் நான் அப்போதும் மனிதர்கள் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். கணினியும், ரோபோக்களும் செயற்கை நுண்ணறிவாழ் நம்மைவிட வேலைகளை சிறப்பாகச் செய்யும் என்றால் நம் பங்கு என்னவாக இருக்கும் எந்த கேள்வி எழுகிறது. எனினும் நாம் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம் என நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக.. தமிழ்நாடு ஹஜ் இல்லம் : நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!