உலகம்
"செயற்கை நுண்ணறிவுவால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது" - எலான் மஸ்க் எச்சரிக்கை !
மனிதனின் பரப்பரப்பான வாழ்வில் தனக்கான வசதிகள் நிறைந்த வாழ்விற்காக, உதவ பலவிதமான தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் தொழில்நுட்பம்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. எனினும் இந்த தொழில்நுட்பம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்கால உலகமே மாறிவிடும்.
எதிர்காலத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சமாகிவிடும்.
எனினும் நான் அப்போதும் மனிதர்கள் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். கணினியும், ரோபோக்களும் செயற்கை நுண்ணறிவாழ் நம்மைவிட வேலைகளை சிறப்பாகச் செய்யும் என்றால் நம் பங்கு என்னவாக இருக்கும் எந்த கேள்வி எழுகிறது. எனினும் நாம் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம் என நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!