உலகம்
ரஷ்யாவின் முக்கிய கப்பல் மூழ்கடிப்பு: உக்ரைனின் பதிலடியால் அரண்டு நிற்கும் புதின்... மாறுமா போரின் நிலை ?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த போரில் சில நாட்களுக்கு முன்னர் பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் உக்ரைனின் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. இதன் காரணமாக ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவின் முக்கிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்துள்ளது.
ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தி அருகே அந்நாட்டுக்கு சொந்தமான 'ப்ராஜெக்ட் 22160' எனும் ரோந்து கப்பல் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது உக்ரைன் அனுப்பிய ஆளில்லா ட்ரோன் ஒன்று ரோந்து கப்பலில் மோதியதில் அந்த கப்பல் கடும் சேதமடைந்து, கடலில் மூழ்கியது. இந்த தாக்குதல் குறித்த விவரங்களை உக்ரைன் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து ரஷ்யா தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை.
ரூ.538 கோடி மதிப்புள்ள இந்த ரோந்து கப்பல், கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த வகை போர்க்கப்பல் ரஷ்யாவிடம் மொத்தம் 4 இருந்த நிலையில், அதில் இரண்டு கப்பல்களை உக்ரைன் மூழ்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!