உலகம்
அதிகரிக்கும் திருட்டு.. Chocolates, Toothpasteக்கு பூட்டு: தத்தளிக்கும் பல்பொருள் அங்காடி நிலையங்கள்!
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் திருடிச் செல்கின்றனர். இந்த திருட்டு சம்பவம் வால்மார்ட், டார்க்ட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களிலும் இப்படியான சம்பவம் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தால் தங்களுக்கு கடுமையாக நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக விற்பனை நிறுவனங்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 120% திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக Arget நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரையன் கார்னெல் கூறுகிறார்.
இதைத் தடுக்கும் விதமாகப் பல விற்பனை நிலையங்களில் சாக்லேட், டூத்பேஸ்ட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் எளிதில் எடுக்காமல் இருக்கும் வகையில் கண்ணாடி அறையில் வைத்து அதற்குப் பூட்டுப் போட்டு விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் கேட்ட பிறகே அதை ஊழியர்கள் எடுத்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
-
“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !
-
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த சக மாணவன் : 5 சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி !