உலகம்
ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார்? .. ரகசியத்தை உடைத்த உக்ரைன் உளவுத்துறை அதிகாரி!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்து இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல முறை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யாப் போர் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடானோவ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய கிரிலோ புடானோவ், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டார். இந்த தகவல் எங்களுக்கு புதினுடன் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவிவந்த நிலையில் உக்ரைன் உளவுத்துறைத் தலைவரின் இந்த செய்தி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!