உலகம்
ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார்? .. ரகசியத்தை உடைத்த உக்ரைன் உளவுத்துறை அதிகாரி!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்து இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல முறை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யாப் போர் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடானோவ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய கிரிலோ புடானோவ், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டார். இந்த தகவல் எங்களுக்கு புதினுடன் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவிவந்த நிலையில் உக்ரைன் உளவுத்துறைத் தலைவரின் இந்த செய்தி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!