உலகம்
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த நிலச்சரிவு.. ஆசை ஆசையாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் !
தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள கொலம்பியாவின் மத்திய மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அங்குள்ள ரிசரால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ நகரில் ஒரு பேருந்து ஒன்று மலை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது. இந்த பேருந்தில் 33 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர அந்த வழியில் வந்துகொண்டிருந்த இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு கார் ஆகியவையும் சிக்கிக்கொண்டுள்ளது. பியூப்லோ ரிக்கோ மற்றும் சான்டா சிசிலியா என்ற இரு கிராமங்களுக்கு இடையே இந்த பேரழிவு நடந்துள்ளது.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புப்படையினர் அந்த இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் மண்ணில் சிக்கியவர்களை தேடும் பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், தேடுதல் வேட்டைக்கு பின்னர் சுமார் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை அறிவித்துள்ளது. இதில் சுமார் 8 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!