உலகம்
10 ஆண்டுகள் குடியிருந்த வீட்டில் 400 ஆண்டுகள் பழமையான தங்கப்புதையல்.. தம்பதியருக்கு அடித்த ஜாக்பாட் !
இங்கிலாந்து நாட்டிலுள்ள வடக்கு யார்க்ஷயர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் வீட்டில் புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்போது சமயலறையில் தோண்டிய போது சுமார் 6 அடியில் ஒரு சிறிய பாத்திரம் போல் ஒன்று கிடைத்துள்ளது.
அதை திறந்து பார்க்கையில் அதில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நாணயங்கள் அனைத்தும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 264 தங்க நாணயங்களை அந்த தம்பதியினர், லண்டனில் உள்ள ஸ்பின்க் & சன் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் மூலம் ஏலத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
அந்த நாணயங்களின் விலை சுமார் ரூ.2.3 கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்த நாணயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவையனைத்தும் 1700-களில் அந்த பகுதியில் வணிகம் செய்த பணக்காரக் குடும்பம் ஒன்று அந்த பகுதியில் வாழ்ந்து வந்ததும், இந்த நாணயங்கள் அந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பின்க் & சன் ஏலம் நிறுவத்தின் கிரிகோரி எட்மண்ட் என்ற நபர் இது குறித்துத் தெரிவிக்கையில், இது 292 பழமை வாய்ந்த புதையல் என்று தெரிவித்துள்ளார். அவர் கணித்த விலையை விட மூன்று அதிக அளவில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!