உலகம்
10 ஆண்டுகள் குடியிருந்த வீட்டில் 400 ஆண்டுகள் பழமையான தங்கப்புதையல்.. தம்பதியருக்கு அடித்த ஜாக்பாட் !
இங்கிலாந்து நாட்டிலுள்ள வடக்கு யார்க்ஷயர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் வீட்டில் புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்போது சமயலறையில் தோண்டிய போது சுமார் 6 அடியில் ஒரு சிறிய பாத்திரம் போல் ஒன்று கிடைத்துள்ளது.
அதை திறந்து பார்க்கையில் அதில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நாணயங்கள் அனைத்தும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 264 தங்க நாணயங்களை அந்த தம்பதியினர், லண்டனில் உள்ள ஸ்பின்க் & சன் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் மூலம் ஏலத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
அந்த நாணயங்களின் விலை சுமார் ரூ.2.3 கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்த நாணயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவையனைத்தும் 1700-களில் அந்த பகுதியில் வணிகம் செய்த பணக்காரக் குடும்பம் ஒன்று அந்த பகுதியில் வாழ்ந்து வந்ததும், இந்த நாணயங்கள் அந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பின்க் & சன் ஏலம் நிறுவத்தின் கிரிகோரி எட்மண்ட் என்ற நபர் இது குறித்துத் தெரிவிக்கையில், இது 292 பழமை வாய்ந்த புதையல் என்று தெரிவித்துள்ளார். அவர் கணித்த விலையை விட மூன்று அதிக அளவில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!