உலகம்
நடு கடலில் கவிழ்ந்த படகு.. 73 அகதிகள் உயிரிழப்பு.. உயிர் பிழைக்க சென்றவர்கள் உயிரிழந்த சோகம் !
லிபியா,லெபனான்,சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் பருவநிலை மாற்றத்தால் கடும் வறுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் பட்டினி சாவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் அங்கிருந்து மக்கள் தற்போது வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் வெளிநாடுகளுக்கு சிலர் தப்ப முயன்றுள்ளனர்.
இவர்கள் சென்ற படகு சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு உயிருக்கு போராடிய 20 பேர்களை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்கமுடிந்தது. இந்த விபத்தில், 73 பேர் உயிரிழந்ததாக சிரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 100 முதல் 150 பேர் வரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
அதெல்லாம் படகு விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை லெபனானுக்கு அனுப்பும் பணிகளை சிரியா தொடங்கியுள்ளதாகவும் விரைவில் சடலங்கள் அங்கு அனுப்பப்படும் என சிரியா அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?