உலகம்
"நா அழகா இருக்குறதாலா என்னய கைது பண்ணுறாங்க.." - சாப்பாடுக்கு பில் கட்டாத இளம்பெண் கதறல் !
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உணவருந்த வந்துள்ளார். அவர் தனக்கு தேவையான உணவை சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனால் உணவக ஊழியர்கள் அங்கிருக்கும் காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும் அந்த பெண் சென்று விட்டதால் அவரின் அடையாளங்களை வைத்து தேடினர். அப்போது அவர் விமான நிலையத்தில் இருக்கும் ஒரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தூங்குவதை கண்டதும் அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனால் அதிகாரிகளும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் மீது எச்சில் துப்பிவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். அதோடு என்னை போன்று வேறு அழகான பெண்ணை பார்க்காததால் அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கின்றனர்' என்றும் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, விமான நிலைய நடத்தையை மீறியதற்காக 1,000 அமெரிக்க டாலர் பிணையில் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார். அக்டோபர் 27 ஆம் தேதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!