உலகம்
"தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" - ஒரு எண் மாறியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !
மலேசியாவைச் சேர்ந்தவர் ஃபஹதா பிஸ்தாரி. இவர் முதல் முறையாக வேலையில் சேர்ந்து தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். தனது சம்பள பணத்தை பார்த்து அம்மா மகிழ்வார்கள் என்று நினைத்திருந்த அவருக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது.
தவறுதலாக அந்த பெண் ஒரு நம்பரை மாற்றி பதிவிட்டதால் அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு தனது பணம் குறித்து கேட்டபோது பணத்தை திரும்பதர முடியாது என்று கூறியுள்ளார்.
அது தனது முதல் மாத சம்பளம் என்றும் அதனால் அது தனக்கு நிச்சயம் வேண்டும் என்றும் அந்த பெண் கூறிய நிலையில், பணத்தை யாருக்கோ தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அந்த பெண் இதுகுறித்து டிக்டாக்கில் பதிவிட்டு தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதன் காரணமாக இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலர் அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், சிலர் இது குறித்து போலிஸில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!