உலகம்
"தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" - ஒரு எண் மாறியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !
மலேசியாவைச் சேர்ந்தவர் ஃபஹதா பிஸ்தாரி. இவர் முதல் முறையாக வேலையில் சேர்ந்து தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். தனது சம்பள பணத்தை பார்த்து அம்மா மகிழ்வார்கள் என்று நினைத்திருந்த அவருக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது.
தவறுதலாக அந்த பெண் ஒரு நம்பரை மாற்றி பதிவிட்டதால் அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு தனது பணம் குறித்து கேட்டபோது பணத்தை திரும்பதர முடியாது என்று கூறியுள்ளார்.
அது தனது முதல் மாத சம்பளம் என்றும் அதனால் அது தனக்கு நிச்சயம் வேண்டும் என்றும் அந்த பெண் கூறிய நிலையில், பணத்தை யாருக்கோ தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அந்த பெண் இதுகுறித்து டிக்டாக்கில் பதிவிட்டு தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதன் காரணமாக இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலர் அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், சிலர் இது குறித்து போலிஸில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.
Also Read
-
“பழனிசாமி, RSS சாமிகள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!