உலகம்
ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட வாலிபர்.. கனவால் நடந்த விபரீதம்!
ஆப்பிரிக்காவின் கானா பகுதியைச் சேர்ந்தவர் கோபி அட்டா. வாலிபரான இவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு ஆட்டை வெட்டுவது போல் ஒரு கனவு வந்துள்ளது. அந்த கனவில் அவர் ஒரு ஆட்டின் தலையை வெட்டுவதுபோல் இருந்துள்ளது. அப்போது திடீரென அவரது அந்தரங்க உறுப்பில் வலி எடுத்துள்ளது. மேலும் அப்பகுதியில் ரத்தம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகுதான் கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொண்டது அவருக்குத் தெரிந்துள்ளது. இருப்பினும் அவரது கைக்குக் கத்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
கனவில் ஆட்டின் தலையை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பை ஒருவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!