உலகம்
நீ என்ன பெரிய புலியா.. பாம்பை ஒரே கடியால் 2 துண்டாக்கிய சிறுமி: எங்கு நடந்தது தெரியுமா?
துருக்கியின் பிங்கோல் அருகே உள்ளது கந்தர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
பின்னர் வலிதாங்காமல் துடித்த அந்த சிறுமி அந்த பாம்பை கையில் எடுத்து வாயில் வைத்துக் கடித்துள்ளார். இதில் பாம்பு இரண்டு துண்டானது. பாம்பின் ஒரு பகுதி தறையில் விழுந்தது. மற்ற பகுதி சிறுமியின் வாயில் இருந்துள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனே சிறுமியை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுமி முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ம் தேதி நடந்துள்ளது. துருக்கியில் 45 வகையான பாம்புகள் உள்ளன. இதில் 12 பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டவை. இதில் சிறுமியை எந்த பாம்பு கடித்தது என இதுவரை தெரியவில்லை. மேலும் விஷமற்ற பாம்பு கடித்திருக்கலாம்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மெஹ்மெட் எர்கான் , "என் குழந்தை பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவளும் பதிலுக்கு பாம்பை மீண்டும் கடித்துள்ளார். இதைக் கிராம மக்கள் பார்த்து என்னிடம் சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !