உலகம்
Wasted! போலிஸாருடன் சேர்ந்து அரைமணி நேரம் தன்னைத் தானே தேடிய நபர் : நடுக்காட்டில் நடந்தது என்ன?
துருக்கியைச் சேர்ந்தவர் முட்லு. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புர்ஷவா பகுதியில் உள்ள காட்டில் மது அருந்தியுள்ளார்.இதையடுத்து அதிகமாகக் குடித்த முட்லு, காட்டில் தனது நண்பர்களைத் தவறவிட்டு வழிமாறிச் சென்றுள்ளார்.
இவர் காணாததால் காட்டில் இவரது நண்பர்கள் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர்களால் முட்லுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர்.
அப்போது போலிஸாரை சந்தித்த முட்லு யாரைத் தேடுகிறீர்கள் என கேட்டுள்ளார். போலிஸார் நண்பர்களுடன் வந்த ஒருவர் வழி தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து முட்லுவும் போலிஸாருடன் சேர்ந்து தேடியுள்ளார். பிறகு போலிஸார் முட்லுவின் பெயரைச் சத்தமாகக் கூறி தேடிக் கொண்டிருந்தனர்.
பிறகுதான் முட்லுவுக்கு காணாமல் போனது வேறு யாரும் இல்லை தாம் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து முட்லு என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறியுள்ளார். இதைச் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் காட்டில் இருந்து அவரை அழைத்து வந்து குடும்பத்தாருடன் சேர்த்தனர்.
முட்லு போலிஸாருடன் சேர்ந்து கிட்டத்தட்ட அரைமணிநேரம் தன்னைத் தானே தேடியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!