உலகம்
விரைவில் மற்றொரு தடுப்பூசி..? : மிரட்டும் நிபா வைரஸ்.. தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள்!
இந்தியாவின் கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது நிபா வைரஸால் 12 வயது சிறுவன் பலியாகி உள்ளான். மேலும் பலர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க, கேரளாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸை கட்டுப்படுத்த, இதுவரை மருந்துகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தடுப்பூசி மருந்தை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த மருந்துக்கு 'சாட் ஆக்ஸ்&1' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து நிபா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை, 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் மருந்து நன்றாக வேலை செய்வது தெரியவந்தது.
ஆப்ரிக்க பச்சை வகை குரங்கின் வைரஸை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற எலிக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் தடுப்பூசி வெற்றிகரமாக வேலை செய்துள்ளது.
இன்னும் பலகட்ட சோதனைகள் நடைபெற இருக்கும் நிலையில் அவற்றிலும் வெற்றி கிடைத்தால் விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!