உலகம்
விரைவில் மற்றொரு தடுப்பூசி..? : மிரட்டும் நிபா வைரஸ்.. தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள்!
இந்தியாவின் கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது நிபா வைரஸால் 12 வயது சிறுவன் பலியாகி உள்ளான். மேலும் பலர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க, கேரளாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸை கட்டுப்படுத்த, இதுவரை மருந்துகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தடுப்பூசி மருந்தை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த மருந்துக்கு 'சாட் ஆக்ஸ்&1' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து நிபா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை, 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் மருந்து நன்றாக வேலை செய்வது தெரியவந்தது.
ஆப்ரிக்க பச்சை வகை குரங்கின் வைரஸை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற எலிக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் தடுப்பூசி வெற்றிகரமாக வேலை செய்துள்ளது.
இன்னும் பலகட்ட சோதனைகள் நடைபெற இருக்கும் நிலையில் அவற்றிலும் வெற்றி கிடைத்தால் விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?