உலகம்
ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரம் - தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த மே மாதம் ரோமினா அஷ்ரஃபி எனும் 14 வயதான சிறுமியின் காதலை ஏற்க மறுத்த அவரது தந்தை அவரைக் கொலை செய்தார். இந்த ஆணவ கொலை தொடர்பாக ரோமினா அஷ்ரஃபியின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார்.
ரோமினாவின் படுகொலைக்கு நியாயம் கேட்டு பலரும் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் சிறுமியின் தந்தை ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆணவக் கொலையைத் தடுக்க இந்தத் தண்டனை போதுமானதல்ல என அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!