உலகம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்? : முடிவுக்கு வராத அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்!
அமெரிக்கா - ஈரான் பிரச்னை கடந்த சில வாரங்களாகவே முற்றி வருகிறது. குறிப்பாக, ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவை பழிவாங்கும் நோக்கோடு ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளவாடங்கள் மீதும், அமெரிக்க தூதரகம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. அந்த தூதரகத்தின் அருகில் இன்று 3 ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இந்த ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை இராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. எனினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !