உலகம்
கனடா நாட்டின் பாராளுமன்றம் ‘திடீர்’ கலைப்பு : தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர் மீண்டும் பிரதமர் ஆவாரா?
கனடாவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார். லிபரல் கட்சித் தலைவராக இருந்த இவர் 2015ல் கனடாவில் ஆட்சிக்கு வந்தார். பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமத்துவம் அளிப்பதன் மூலமும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் ட்ரூடோ ஆட்சிக்கு வந்தார்.
கனடாவில் வாழும் தமிழர்களின் அன்பைப் பெற்ற ஜஸ்டின், தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார பெருமைகளை உணர்ந்தவர். தமிழர்களின் விழாக்களில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை சகிதமாக குடும்பத்தோடு கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனடாவின் பொதுத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. பிரமர் ஜஸ்டின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் சவாலாக இருக்கிறது. கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பிரதமர் ஜஸ்டினின் லிபரல் கட்சிக்கு எதிராகவே உள்ளன எனக் கூறப்படுகிறது.
மொத்தம் 338 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ட்ரூடோவின் கட்சி 170 உறுப்பினர்களை வெல்ல வேண்டும். ட்ரூடோ மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார். தோல்விக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!