உலகம்
வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றத்தை ரத்து செய்த பாகிஸ்தான்- விதைக்கப்படும் வெறுப்புணர்வு: பா.ஜ.க காரணமா ?
பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி பகுதியில் உள்ள வாகா எல்லையில் இருநாட்டு ராணுவத்தினர் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கோடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பார்கள்.
அப்போது இருநாட்டு ராணுவ வீர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறும். அதனைக் கூடியிருக்கும் மக்கள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது இருநாட்டின் பாரம்பரிய இனிப்பு வகைகள் பரிமாறப்படும். இது இரு நாட்டின் நட்புறவை வெளிபடுத்தும் விதமாக அமையும்.
ஆனால் இந்தாண்டு அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.
அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையின் போதும், பாகிஸ்தான் சுதந்திர தினத்தின் போதும் வாகா எல்லையில் இனிப்புகள் பரிமாறப்படவில்லை. இது இருநாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இப்படியொரு வரலாற்று நிகழ்வு கைவிட்டு போனதற்கு பா.ஜ.க அரசே காரணம், இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் போனதற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்காமால் பா.ஜ.க அரசு செயல்படுவது அதன் அதிகார அகந்தையைக் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
Also Read
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!