Viral
பறக்கும் விமானத்தில் கொடுக்கப்பட்ட Sandwich... ஆசையாய் சாப்பிட்ட பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து Indigo விமானம் சென்னை வருவது வழக்கம். அப்போது பயணி ஒருவர் கடந்த பிப் 1-ம் தேதி இதே விமானத்தில் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு விமானம் சார்பில் Sandwich கொடுக்கப்பட்டது. அப்போது அதனை சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் என வைத்திருந்த அந்த பயணி, சென்னை வந்ததும் அதனை சாப்பிட்டுள்ளார்.
அப்போது அதில் பெரிய இரும்பு திருகு (Screw) இருந்துள்ளது. இதனை கண்ட அந்த பயணி அதிர்ச்சியடைந்து உடனே புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்களோ இதற்கு தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று மன்னிப்பு கூட கேட்காமல் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் அந்த பயணி வேறு வழியின்றி இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து புகாரோடு சேர்த்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவையடுத்து பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதோடு, உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இண்டிகோ சேவைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”