Viral
அலட்சியம் காட்டிய ஆப்பிள் நிறுவனம்.. நீதிமன்றம் படியேறி ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற இளைஞர்: நடந்தது என்ன?
பெங்களூருவை சேர்ந்தவர் அவேஸ் கான். இவர் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் iPhone 13 செல்போன் வாங்கியுள்ளார். இதை வாங்கும் போது அவருக்கு ஒரு வருடம் வாரண்டி கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் இந்திரா நகரில் உள்ள iPhone மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஊழியர்கள் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு ஒரு வாரம் கழித்து வரும்படி கூறியுள்ளனர். பின்னர் அவரும் ஒரு வாரம் கழித்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் பழுது நீக்கி விட்டதாகக் கூறி செல்போனை கொடுத்துள்ளனர். அங்கேயே சோதனை செய்தபோது பிரச்சனை அப்படியேதான் இருந்துள்ளது. இதனால் மீண்டும் அவரது செல்போனை வாங்கிக் கொண்டனர். பின்னர் இரண்டு வாரங்கள் ஆகியும் பிரச்சனையை சரி செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால் செல்போன் வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை . இதனால் வாரண்டி அடிப்படையில் செல்போனை மாற்றிக் கொடுக்கும் படி கூறியுள்ளனர். இதற்கு ஊழியர்கள் மறுத்துள்ளனர். மேலும் கூடுதலாகப் பணம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.79,900 இழப்பீட்டுத் தொகை மற்றும் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக ரூ.20000 ஆயிரம் என ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!