Viral
"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." 2 ரூமுக்கு ஒரு AC.. மும்பையில் சிக்கனமாக இயங்கும் பிரபல ஹோட்டல்.. || VIRAL
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அனுராக் மைனஸ் வர்மா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2011-ம் ஆண்டு மும்பையில் ஒரு அறையை புக் செய்தேன். அப்போது அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது தற்போது இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது" என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
மேலும் எங்களுடைய ஒரு அறையில் நாங்களும். மற்றொரு அறையில் 2 பேரும் இருந்தனர். மற்றொரு அறையில் இருந்தவர்கள் காலை 4 மணி வரை 'கன்பத் சல் தாரு லா' பாடலை வாசித்துக் கொண்டே இருந்தனர்." என்றும் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இரண்டு அறைக்கு சேர்த்து ஒரு ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், இந்த ஏ.சியின் ரிமோட் தனக்கு எதுவும் வழங்கப்படாததால் ஏ.சியின் வெப்பநிலையை மாற்றுவது அல்லது அதை அணைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!