Viral
"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." 2 ரூமுக்கு ஒரு AC.. மும்பையில் சிக்கனமாக இயங்கும் பிரபல ஹோட்டல்.. || VIRAL
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அனுராக் மைனஸ் வர்மா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2011-ம் ஆண்டு மும்பையில் ஒரு அறையை புக் செய்தேன். அப்போது அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது தற்போது இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது" என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
மேலும் எங்களுடைய ஒரு அறையில் நாங்களும். மற்றொரு அறையில் 2 பேரும் இருந்தனர். மற்றொரு அறையில் இருந்தவர்கள் காலை 4 மணி வரை 'கன்பத் சல் தாரு லா' பாடலை வாசித்துக் கொண்டே இருந்தனர்." என்றும் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இரண்டு அறைக்கு சேர்த்து ஒரு ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், இந்த ஏ.சியின் ரிமோட் தனக்கு எதுவும் வழங்கப்படாததால் ஏ.சியின் வெப்பநிலையை மாற்றுவது அல்லது அதை அணைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!