Viral
வீட்டிற்குச் செல்லும்போது சாலையோர கடையில் மாம்பழம் திருடிய கேரள போலிஸ்: காட்டிக் கொடுத்த CCTV!
கேரள மாநிலம், இடுக்கி ஏ.ஆர்.கேம்ப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஷஹீப். இவர் அண்மையில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் இருந்த பழக்கடை அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் யாரும் அங்கு இல்லாததைக் கண்ட அவர் ஒரு கூடை மாம்பழத்தைத் தனது வாகனத்தில் வைத்துத் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இப்படியான போலிஸாரால் காவல்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது' என இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஷஹீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கடையில் இருந்து போலிஸார் மாம்பயம் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !