Viral
வீட்டிற்குச் செல்லும்போது சாலையோர கடையில் மாம்பழம் திருடிய கேரள போலிஸ்: காட்டிக் கொடுத்த CCTV!
கேரள மாநிலம், இடுக்கி ஏ.ஆர்.கேம்ப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஷஹீப். இவர் அண்மையில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் இருந்த பழக்கடை அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் யாரும் அங்கு இல்லாததைக் கண்ட அவர் ஒரு கூடை மாம்பழத்தைத் தனது வாகனத்தில் வைத்துத் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இப்படியான போலிஸாரால் காவல்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது' என இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஷஹீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கடையில் இருந்து போலிஸார் மாம்பயம் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!