Viral
வீட்டிற்குச் செல்லும்போது சாலையோர கடையில் மாம்பழம் திருடிய கேரள போலிஸ்: காட்டிக் கொடுத்த CCTV!
கேரள மாநிலம், இடுக்கி ஏ.ஆர்.கேம்ப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஷஹீப். இவர் அண்மையில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் இருந்த பழக்கடை அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் யாரும் அங்கு இல்லாததைக் கண்ட அவர் ஒரு கூடை மாம்பழத்தைத் தனது வாகனத்தில் வைத்துத் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இப்படியான போலிஸாரால் காவல்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது' என இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஷஹீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கடையில் இருந்து போலிஸார் மாம்பயம் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !