Viral
டாக்டர் என்றால் இவர் மாதிரி இருக்கனும்.. இணையத்தில் வைரலாகும் மருத்துவரின் கையெழுத்து !
உலகில் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் பல இருக்கிறது. எகிப்து பிரமீடு முதல் நம்ம ஊர் தஞ்சை பெருவுடையார் கோவில் வரை அதை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் எல்லாருக்கும் பொதுவாக இருப்பது என்றால் அது மருத்துவர்களின் கையெழுத்துதான்.
அதில் என்ன இருக்கிறது, என்ன எழுதுகிறார்கள் என அந்த துறையில் இருப்பவர்களை தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த கையெழுத்தால் நாமும் பலமுறை எரிச்சல் ஆகியும் இருப்போம்.
இந்த நிலையில், அந்த நிலையை தாண்டி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மருந்து சீட்டை எழுதுகொடுத்துள்ளார் ஒரு மருத்துவர் ஒருவர். அவரின் அந்த மருந்து சீட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மருத்துவர் நிதின் நாராயணன். இவர் பாலக்காட்டில் உள்ள நெம்மாராவில் உள்ள CHC ல் பணிபுரிந்துவருகிறார். இவர் தன்னுடன் வரும் நோயாளிகளுக்கு அனைவர்க்கும் புரியும் வகையில் மருத்துவ சீட்டு எழுதி வருகிறார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் நிதின் நாராயணன் "சிறு வயதில் இருந்தே அழகாக எழுதுவது எனக்கு பிடிக்கும் என்றும் எதற்காகவும் அதை மாற்றக்கூடாது என்ற மனநிலை எப்போதும் இருக்கும். நான் மருத்துவரான பிறகும் மற்ற மருத்துவர்களைப் போன்று இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த என்னுடைய கையெழுத்தை மாற்றவே இல்லை, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மருந்துச்சீட்டுகளை அனைவருக்கும் புரியும் படி அழகாகத் தான் எழுதுவேன் என்றும் இதை யாருக்காகவும் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!