Viral
டாக்டர் என்றால் இவர் மாதிரி இருக்கனும்.. இணையத்தில் வைரலாகும் மருத்துவரின் கையெழுத்து !
உலகில் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் பல இருக்கிறது. எகிப்து பிரமீடு முதல் நம்ம ஊர் தஞ்சை பெருவுடையார் கோவில் வரை அதை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் எல்லாருக்கும் பொதுவாக இருப்பது என்றால் அது மருத்துவர்களின் கையெழுத்துதான்.
அதில் என்ன இருக்கிறது, என்ன எழுதுகிறார்கள் என அந்த துறையில் இருப்பவர்களை தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த கையெழுத்தால் நாமும் பலமுறை எரிச்சல் ஆகியும் இருப்போம்.
இந்த நிலையில், அந்த நிலையை தாண்டி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மருந்து சீட்டை எழுதுகொடுத்துள்ளார் ஒரு மருத்துவர் ஒருவர். அவரின் அந்த மருந்து சீட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மருத்துவர் நிதின் நாராயணன். இவர் பாலக்காட்டில் உள்ள நெம்மாராவில் உள்ள CHC ல் பணிபுரிந்துவருகிறார். இவர் தன்னுடன் வரும் நோயாளிகளுக்கு அனைவர்க்கும் புரியும் வகையில் மருத்துவ சீட்டு எழுதி வருகிறார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் நிதின் நாராயணன் "சிறு வயதில் இருந்தே அழகாக எழுதுவது எனக்கு பிடிக்கும் என்றும் எதற்காகவும் அதை மாற்றக்கூடாது என்ற மனநிலை எப்போதும் இருக்கும். நான் மருத்துவரான பிறகும் மற்ற மருத்துவர்களைப் போன்று இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த என்னுடைய கையெழுத்தை மாற்றவே இல்லை, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மருந்துச்சீட்டுகளை அனைவருக்கும் புரியும் படி அழகாகத் தான் எழுதுவேன் என்றும் இதை யாருக்காகவும் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!