Viral
ஆர்டர் செய்ததோ IPHONE .. வந்ததோ HAND WASH: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் - தொடரும் ஆன்லைன் மோசடி!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கௌலா லாஃப்கெய்லி. இவர் சில நாட்களுக்கு முன்பு iPhone 13 Pro Max என்ற செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்த செல்போனின் மதிப்பு ரூ.1 லட்சத்து 29 ஆயிரமாகும்.
இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்துள்ளது. இதைப் பிரித்துப் பார்த்தபோது iPhoneக்கு பதிலாக ஹெண்ட் வாஷ் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த பெண் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தியதில் ஆர்டரை டெலிவரி செய்த நபர்தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட டெலிவரி நிறுவனம் அவரிடம் விசாரணை செய்து வருகிறது. இப்படி நடப்பது இது முதல்முறையல்ல.
அண்மையில் கூட கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்த ஐ போனுக்கு பதில் சோப்பு கட்டி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !