Viral
“ஆசிரியர் தலையில் குப்பை பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம்” : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் !
கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டம், சென்னகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் அரசு உயிர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டூழியம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி வகுப்பு ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் கவுடா பள்ளியில் வகுப்புகள் எடுக்கும் போது அதை கவனிக்காத மாணவர்கள் 4 பேர், ஆசிரியரை பாடம் எடுக்கவிடாமல், கேளி செய்துள்ளனர். தொடர்ந்து ஆசிரியரின் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து அவரிடம் அத்துமீறி உள்ளனர். இந்த சம்பவத்தை வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற ஒழுங்கீனமான மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வளைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தவெக ஆட்சியில் மின்சாரத்துறையின் அவலம் - பேரவையில் புட்டுப்புட்டு வைத்த செந்தில் பாலாஜி!
-
“உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது” : அமைச்சர் ரமேஷிற்கு சேகர் பாபு பதிலடி!
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!