Viral
“ஆசிரியர் தலையில் குப்பை பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம்” : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் !
கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டம், சென்னகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் அரசு உயிர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டூழியம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி வகுப்பு ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் கவுடா பள்ளியில் வகுப்புகள் எடுக்கும் போது அதை கவனிக்காத மாணவர்கள் 4 பேர், ஆசிரியரை பாடம் எடுக்கவிடாமல், கேளி செய்துள்ளனர். தொடர்ந்து ஆசிரியரின் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து அவரிடம் அத்துமீறி உள்ளனர். இந்த சம்பவத்தை வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற ஒழுங்கீனமான மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வளைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!