Viral
“சென்னையில் அரசுப் பேருந்து கடத்தல்” - அண்ணாநகர் பணிமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அண்ணாநகர் பணிமனையில் வழக்கம்போல், அதிகாலையில் பேருந்தை எடுப்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, பணிமனையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்தை சோதனை செய்த பின், பணிமனையின் முன்பாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.
பின்னர், கையெழுத்திட்டு வருவதற்காக பணிமனைக்கு உள்ளே சென்று விட்டு, 4 மணிக்கு திரும்பிய போது, நிறுத்திய இடத்தில் பேருந்து இல்லாமல் போனதைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
அரசுப் பேருந்து காணாமல் போனது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு, பேருந்து இருக்குமிடத்தை காவல் துறையினர் கண்டறிய முயற்சித்தனர்.
அப்போது, பேருந்தானது பாடி மேம்பாலத்தின் கீழ் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேம்பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பேருந்தை காவல்துறையினர் மீட்டனர். பணிமனையில் இருந்த பேருந்தை வெகு லாவகமாக கடத்திச் சென்றவர்களை கண்டுபிடிப்பதற்காக, பணிமனையைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமராக்களை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!