Viral
“சென்னையில் அரசுப் பேருந்து கடத்தல்” - அண்ணாநகர் பணிமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அண்ணாநகர் பணிமனையில் வழக்கம்போல், அதிகாலையில் பேருந்தை எடுப்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, பணிமனையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்தை சோதனை செய்த பின், பணிமனையின் முன்பாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.
பின்னர், கையெழுத்திட்டு வருவதற்காக பணிமனைக்கு உள்ளே சென்று விட்டு, 4 மணிக்கு திரும்பிய போது, நிறுத்திய இடத்தில் பேருந்து இல்லாமல் போனதைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
அரசுப் பேருந்து காணாமல் போனது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு, பேருந்து இருக்குமிடத்தை காவல் துறையினர் கண்டறிய முயற்சித்தனர்.
அப்போது, பேருந்தானது பாடி மேம்பாலத்தின் கீழ் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேம்பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பேருந்தை காவல்துறையினர் மீட்டனர். பணிமனையில் இருந்த பேருந்தை வெகு லாவகமாக கடத்திச் சென்றவர்களை கண்டுபிடிப்பதற்காக, பணிமனையைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமராக்களை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!