Viral
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலிஸார் வழங்கிய நூதன தண்டனை!
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டது. இதில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து போலிஸாரால் நடத்தப்பட்டது. மேலும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அப்போது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலிஸார் வித்தியாசமான தண்டனை ஒன்றை விதித்துள்ளனர்.
அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம், ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் எழுதித்தருமாறு போலிஸார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து போலிஸார் கூறுகையில், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்துக்கூறினோம். இதன்மூலம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!