Viral
"உபயோகிக்கப்படாமல் இருக்கும் கணக்குகள் நீக்கப்படும்” - பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த ட்விட்டர்!
வெகு நாட்களாக உபயோகிக்கப்படாமல் இருக்கும் ஜிமெயில், யாஹூ கணக்குகளை அந்நிறுவனங்களே நீக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த வழக்கத்தை தற்போது ட்விட்டரும் கையில் எடுத்துள்ளது.
அதாவது, 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் டிசம்பர் 11ம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் அவற்றை நீக்கப்போவதாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
கணக்குகள் நீக்கப்படுவதன் அறிவிப்புகள் முறையாக பயனாளர்களின் ஜிமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும், அதற்குப் பின்னரே ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு கூடுதள் வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தாமல் உள்ள கணக்குகளை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், இதற்காக புதிய கொள்கை வரைவுகளையும் ட்விட்டர் தயாரித்துள்ளது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!