Viral
காவி உடை, ருத்ராட்ச மாலை -திருவள்ளுவரை அவமதித்த பா.ஜ.கவுக்கு எதிராக ட்ரெண்டாகும் #BJPInsultsThiruvalluvar
தமிழகம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் தற்போது தமிழ்நாட்டு மக்களை நெருங்கும் முயற்சியில் இறங்கி தமிழ்மொழிக்குப் பெருமை செய்தவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க சார்பில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் இருக்கக்கூடிய படத்தில் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிந்து, ருத்திராட்ச மாலை, பட்டை என மத அடையாளங்களைப் பூசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பா.ஜ.கவினருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!
-
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!
-
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமா.. வி.சி.க. வேட்பாளர்கள் யார், யார்?