Viral
புதுச்சேரியில் போலீசுக்கு‘அடி-உதை’: ரவுடிகள் வெறிச்செயல்- வைரல் வீடியோ!
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோசப் தடையைமீறி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சிவகுரு, மைக்கேல் ஆகியோர் உடனே அங்கு சென்றனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஜோசப் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரிடம், 144 தடை உத்தரவு போட்டிருப்பதால் ஊருக்குள் இருக்கக்கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜோசப் போலீசார் சிவகுருவை சரமாரி தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்றொரு போலீசார் மைக்கேலை ஜோசப்பின் தம்பி தமிழ் பிடித்துக் கொண்டார்.
இதனால் இதனால் அவருக்கும் அடிவிழுந்தது. இதையடுத்து ஜோசப்பும் தமிழும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை போலீசாரை தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி, கரிக்கலாம்பாக்கம் பொதுமக்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!