Viral
’என்கிட்ட அடி வாங்கிறியா... இல்ல போலிஸ்கிட்ட வாங்கிறியா ?’ : தொல்லை கொடுத்தவருக்கு இளம்பெண்ணின் பதிலடி !
நெல்லை களக்காடுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பதிலுக்கு அந்தப் பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்து வைப்பதற்காக அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு அருகே பழக்கடை வைத்துள்ள இளைஞருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளது. இளம்பெண்ணுக்கு இந்த நபர் அடிக்கடி பாலியல் ரீதியில் சைகைகள் காண்பிப்பதையும், தொல்லை கொடுப்பதையும் வழக்கமாக செய்து வந்துள்ளார்.
ஒரு நாள், அந்த பெண்ணுக்கு போன் செய்து ஆபாசமாகவும் பேசியுள்ளார். அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிகாட்டாமல் அவருக்கு போன் செய்து, தனது வீட்டு அருகே உள்ள தென்னந்தோப்புக்கு அந்த நபரை வரச் சொல்லியிருக்கிறார்.
இதனை நம்பி தென்னந்தோப்பிற்குச் சென்ற அந்த நபரை அந்த பெண், திட்டியபடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் தனது போனில் பதிவு செய்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் தோப்பில் இருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞரை விரட்டி பிடித்து மேலும் அடித்துள்ளார்.
என்கிட்ட அடி வாங்கிறியா இல்ல, போலிஸ் கிட்ட அடி வாங்கிக்கிறியா? என அந்த நபரை சரமாரியாக வசை பாடிக்கொண்டே வீடியோவும் பதிவு செய்துள்ளார் இளம்பெண்.
3 நிமிடத்துக்கு மேல் இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபருக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் கன்னியாகுமரியைச் சேர்ண்ட பெண்ணின் செயல் அனைவராலும் பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது.
Also Read
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!