Viral
சுதந்திர தினத்தை கொண்டாடிய தோடர் இன மக்கள் : பழங்குடியினர்கள் மொழியில் தேசியகீதம் பாடி அசத்தல் !
நாடுமுழுவதும் 73வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களில் தேசியக்கொடியேற்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 73 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சுதந்திர தினத்தை நீலகிரி பழங்குடியின மக்கள் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கக் கூடிய “தோடர் பழங்குடியினர்” மந்து எனப்படும் சிறு குக்கிராமங்களில் பசுமையாக வாழக்கூடியவர்கள். முற்றிலும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுதந்திர தினத்தை பாடல்களை அவர்கள் மொழிகளில் பாடல் அமைய வேண்டும் என்ற நோக்கில் சுதந்திர தின பாடலை அவர்கள் மொழியில் பாடியுள்ளனர்.
அத்துடன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் உதகையில் இருந்து பைக்கரா செல்லும் சாலையில் அமைந்துள்ள பள்ளியில் தேசியக்கொடியுடன் பாடல் பாடி மரியாதை செலுத்தியுள்ளனர்.
பழங்குடியினர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாடல் அமைத்து பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். பழங்குடியினர்களின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!
-
“தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
சிறுபான்மையினர் சுதந்திரத்தில் கைவைத்த ‘விஜய்’, மக்களின் கேள்விக்கு பதில் சொல்வாரா? : சா.மு.நாசர் கேள்வி!
-
“கலைஞரின் புகழையும், சாதனைகளையும் எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!” : தவெக அரசுக்கு பி.வில்சன் கண்டனம்!
-
“நூலக அரங்கில் அகற்றப்பட்ட கலைஞரின் புகைப்படம்.. தவெக அரசின் காழ்ப்புணர்ச்சியா?.. குவியும் கண்டனங்கள்”