Viral
“மதுபாட்டில்களை கடத்தி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்”- பெண் தோழியுடன் பிடிபட்ட போது தப்பி ஓடியதால் பரபரப்பு!
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் கடலூர் அருகே உண்ணாமலைச்செட்டி சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பொலிரோ காரை மறித்தனர். போலீசை கண்டதும், அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்த னர். அதில் 148 மதுப்பாட்டில்கள், 30 லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48) என தெரிய வந்தது.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுச்சேரியில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நட்பாக மாறியது.
பின்னர், இருவருமாக சேர்ந்து காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து தமிழக பகுதிகளில் அதிகவிலைக்கு விற்று வந்துள்ளனர். கிடைத்து வந்த லாபத்தில் இருவரும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.
தப்பி ஓடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலியே பயிரை மேய்வது போல், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே கடத்தல்பேர்வழியாக மாறியிருப்பது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!