Viral
ஜாகுவார் கேட்டா BMW வாங்கித் தர்றியா ? : தந்தையிடம் கோபப்பட்டு 70 லட்ச ரூபாய் காரை ஆற்றில் தள்ளிய மகன்
ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள இளைஞர் ஒருவர் பெரும் பணகாரரான தனது தந்தையிடம் ஜாகுவார் கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தந்தையோ ஜாகுவார் காருக்கு பதில் BMW காரை பரிசாக அளித்திருக்கிறார். இதனை வாங்க மறுத்த அந்த இளைஞன், ஜாகுவார் கார் கிடைக்காத ஆத்திரத்தில் புதிதாக வாங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.
ஆற்றில் தள்ளிவிட்ட கார் திடீரென சிக்கிக்கொண்டதால், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஆற்றில் காரை தள்ளிவிட்டதை அந்த இளைஞர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!