Viral
ஜாகுவார் கேட்டா BMW வாங்கித் தர்றியா ? : தந்தையிடம் கோபப்பட்டு 70 லட்ச ரூபாய் காரை ஆற்றில் தள்ளிய மகன்
ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள இளைஞர் ஒருவர் பெரும் பணகாரரான தனது தந்தையிடம் ஜாகுவார் கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தந்தையோ ஜாகுவார் காருக்கு பதில் BMW காரை பரிசாக அளித்திருக்கிறார். இதனை வாங்க மறுத்த அந்த இளைஞன், ஜாகுவார் கார் கிடைக்காத ஆத்திரத்தில் புதிதாக வாங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.
ஆற்றில் தள்ளிவிட்ட கார் திடீரென சிக்கிக்கொண்டதால், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஆற்றில் காரை தள்ளிவிட்டதை அந்த இளைஞர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!