Viral
மனைவியை தற்கொலைக்குத் தூண்டினாரா ‘பாகுபலி’ நடிகர் ? - கள்ளத்தொடர்பு காரணமா என போலிஸ் விசாரணை
தமிழ், தெலுங்கில் திரைஉலகத்தை கலக்கிய ‘பாகுபலி’ படத்தில் படைத் தளபதிகளில் ஒருவராக நடித்தவர் மதுபிரகாஷ். இவர் சில தெலுங்கு டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். . இவரது மனைவி பாரதி. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.
இதனிடையே மதுபிரகாஷ் சக நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதிசந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவர் மீது பாரதி போலீசில் புகார் செய்தார். அப்போது, குடும்பத்தினரும், போலீசாரும் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்புக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுபிரகாஷை, பாரதி போனில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். அப்படி உடனே வராவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் என்றும் மிரட்டினார்.
இதனை மதுபிரகாஷ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. நிதானமாக இரவு 7.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்த அவர் பாரதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மனைவி தற்கொலை தொடர்பாக மதுபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!