Viral
நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் அமைகிறது விண்வெளி பூங்கா! - கேரள முதல்வர் அசத்தல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. இங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார்.
இந்நிலையில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக கேரள அரசு தெரிவித்தது. ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் அதாவது நாலேட்ஜ் சிட்டி அமைக்கும் பணிகள் மும்பரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதில், 20 ஏக்கரில் நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.
மேலும் இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாலேட்ஜ் செண்டர், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை செயலர் சிவசங்கர் கூறுகையில், ''விண்வெளி பூங்கா திட்டப்பணிகள் நிறைவேறும்போது, நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தில் கேரளா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதற்கு வழிவகைகள் செய்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையதிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் கேரள அரசு அறிவுசார் வளர்ச்சியை எப்போதும் ஊக்குவிக்கும்”. என அவர் இவாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!