Videos

நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்! - சாதியை புறந்தள்ளி நீதியை பேசிய அம்பேத்கர் சொல்வதைக் கேளுங்கள்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, அம்பேத்கர் சிலை உடைத்து முற்றிலும் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிலை உடைப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து அதே இடத்தில் இரவோடு இரவாக அம்பேத்கர் திருவுருவச் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.

இந்தியாவிலேயே அதிகமாக சேதப்படுத்தப்பட்டது அம்பேத்கரின் சிலை. சாதியை புறந்தள்ளி நீதியை பேசிய அம்பேத்கரின் சிலை மட்டும் தொடர்ந்து உடைக்கப்படுகிறது. அப்படி உடைப்பதால் யாருக்கு இழப்பு? யாருக்கு என்ன பயன்?.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கேட்டிருந்தால், அம்பேத்கர் என்ன சொல்லியிருப்பார்?... பின்வரும் வீடியோவில் முழு பதிலை காணுங்கள்.