Tamilnadu
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய், நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளார்.
குறிப்பாக பயிர்க்கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம் என தேர்தல் நேரத்தில் சொன்னது ஒன்றாகவும், ஆட்சிக்கு வந்தபின் செய்வது ஒன்றாகவும் இந்த தி.மு.க அரசு இருந்து வருகிறது.தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிறது.
ஆனால் மின்வெட்டே இல்லை என அமைச்சர்கள் பொய் பேசி வருகிறார்கள். விலைவாசி உயர்வும் மற்றொரு பிரச்சனையாக எழுந்துள்ளது.
இப்படி தினமும் ஒரு பிரச்சனையை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் தி.மு.க எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த த.வெ.க எம்.எல்.ஏ சத்தியாவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் த.வெ.க அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!