Tamilnadu
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, நன்னிமங்கலம் மெயின்ரோட்டில் தாய், தந்தையை இழந்து சித்தி, சித்தப்பா பாதுகாப்பில் இருந்துவரும் வசித்துவரும் குழந்தைகள் சுவாதி, ஸ்வேதா, சிவேஷ்வர் ஆகியோரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் வீடியோ கால் வாயிலாக ஆறுதல் கூறினார்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அலைபேசியில் வீடியோ கால் வாயிலாக குழந்தைகளிடம் தைரியமாக இருக்க வேண்டுமெனவும், கல்வியில் சிறந்து விளக்கவேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்கள்.
பின்னர், தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட, இலவச வீட்டுமனை பட்டாவினை குழந்தைகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் இக்குழந்தைகளுக்கு ரூ.2000 கிடைக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர் பாத்திமா பஷிரா தாஜ், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சிவரஞ்சனி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் வசுமதி, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!