Tamilnadu
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை உடனே வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.கே.பி நகர் முல்லை நகர் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியினை ஆய்வு செய்தார்.
அப்போது, மழையால் பொதுமக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்து, விவரங்களை அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இதற்கு முன்னதாக, மழைத்தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மழை நேரத்தில் மக்கள் பாதிப்பைச் சந்திக்காத வண்ணம் துரிதமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!