Tamilnadu
”2026 தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும்” : சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மக்களுடன் யார் இருக்கிறார்கள், கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சாரக அரியணையில் அமர்வார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு ”கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, அங்கிருந்து வெளியேறிய த.வெ.க கட்சியை என்ன செய்வது என்று மக்கள் முடிவு செய்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
மக்களுடன் யார் இருக்கிறார்கள்? கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார்கள்? என்பதை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிதான் இருக்கிறோர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அரியணையில் அமருவார்.
அ.தி.மு.கவினர் எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வது என்பது அவர்களின் சொந்த விருப்பம் ஆகும். டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை இரண்டு முறை சந்தித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சென்று பார்த்தார். அமித்ஷா சொல்லித்தான் செங்கோட்டையன் செயல்படுவதாக செய்திகள் வந்தது. அவர் கண்ணியத்துக்குரிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அவர் பா.ஜ.வின் ஸ்லீப்பர்செல் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் சதி செய்வதில் வல்லவர்கள். எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!