Tamilnadu
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து, ஆதாரத்தை வெளியிட்டார். மேலும், இந்த வாக்குத் திருட்டுக்கான கூடுதல் ஆதாரங்கள் வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியது.
ஆனால் முக்கிய ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால், வாக்குத் திருட்டின் பின்னணியில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கலபுரகி மாவட்டம் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த விவரங்களை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு போலி விண்ணப்பத்திற்கும் ஒரு தரவு மையத்திற்கு 80 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
2022 டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை வாக்காளர் பெயர் நீக்கத்திற்காக மொத்தம் 6 ஆயிரத்து 18 போலி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மொத்தமாக அந்த தரவு மையத்திற்கு 4 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு மதிப்பிட்டுள்ளது. இந்த தகவல்கள் கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!