Tamilnadu
20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு : மகிழ்ச்சியில் கிராம மக்கள்!
அரியலூர் மாவட்டம் , கூவத்தூர் அகினேஸ்புரம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார் கோயிலுக்கு புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இந்த மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த புதிய வழித்தடம் குறித்தும் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்னார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து செப்.18 ஆம் தேதி அகினேஸ்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பேருந்து சேவை, அகினேஸ்புரம் மக்களின் பயணத்தை எளிதாக்குவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும். மக்களின் குரலை உடனுக்குடன் கேட்டு, 20 ஆண்டு கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிய திமுக அரசின் இந்த மாபெரும் சாதனை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அவர்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!