Tamilnadu
20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு : மகிழ்ச்சியில் கிராம மக்கள்!
அரியலூர் மாவட்டம் , கூவத்தூர் அகினேஸ்புரம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார் கோயிலுக்கு புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இந்த மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த புதிய வழித்தடம் குறித்தும் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்னார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து செப்.18 ஆம் தேதி அகினேஸ்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பேருந்து சேவை, அகினேஸ்புரம் மக்களின் பயணத்தை எளிதாக்குவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும். மக்களின் குரலை உடனுக்குடன் கேட்டு, 20 ஆண்டு கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிய திமுக அரசின் இந்த மாபெரும் சாதனை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அவர்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!