Tamilnadu
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்," பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழும் 2025-26 ம் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக , இதே 2025-26 ம் நிதியாண்டில், கடந்த 30.04.2025 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மகளிர் இடஒதுக்கீட்டுடன், தொகுதி மறுவரை.. பாஜகவின் பகிரங்க திட்டம்: ராணிப்பேட்டையில் முதலமைச்சர் பேச்சு!
-
”மகளிர் இட ஒதுக்கீடு.. தொகுதி மறுவரையறை.. தென் மாநில தயவு தேவையில்லை என்ற எண்ணம்” : முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாடு - தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது!”: திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“டெல்லி இருளை வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் அரசை தொடரச் செய்வோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
உழவர்களை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத் திமிர் : தி.மு.க IT WING கண்டனம்!