Tamilnadu
மகப்பேறு விடுமுறை காலத்தை ஓராண்டாக நீட்டிக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP வலியுறுத்தல்!
ஒன்றிய அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை ஒரு ஆண்டாக நீட்டிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங்கிற்கு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு தமிழக அரசுப்பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சமீபத்தில் மகப்பேறு விடுமுறைக் காலத்தை 6 மாதங்களில் இருந்து ஒரு ஆண்டாக அதிகரித்து ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இத் துணிச்சலான திட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முன்மாதிரி திட்டம், பெண் அரசு ஊழியர்களுக்கு பிரசவகாலத்தில் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய வகையிலும் அவர்கள் குழந்தைகளின் நலத்துக்கும் உதவியாக அமைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூட பெண் ஊழியர்களுக்குப் போதுமான பிரசவகால விடுமுறை வழங்குவது அவர்கள் உடல் நலத்தைக் காக்க உதவுவதுடன் குழந்தைகளுக்குக் குறைந்த பட்சம் 6 மாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வழி ஏற்படும். இதனால் தாய்மார்களின் நலனும், குழந்தைகளின் ஆரோக்கியமும் காக்கப்படும் என்று கூறியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் திட்டத்தை முன்மாதிரியாகப் பின்பற்றி மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!