Tamilnadu
மீண்டும் பரவும் கொரோனா ? பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு !
சமீப காலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதன் நிலையில் இதற்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மறுப்பு தெரிவித்துள்ளார்
இது குறித்து கூறியுள்ள அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்திருந்தார். மேலும், வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவல் தடுப்பதற்கான அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்
உலக சுகாதார துறையும் ஒன்றிய அரசும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று கூறியது தவிர மற்ற எந்த விவரங்களையும் கூறவில்லை என்று கூறிய அவர் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகள் தவறானவை எனவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை எனவும் தெரிவித்தார்
அதோடு பொது இடங்களில் முகக்கவசம் தமிழ்நாட்டில் இனி அவசியம் என்று பரவி வரக்கூடிய செய்தி தவறானவை எனவும் சுகாதாரத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மைத்தன்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!