Tamilnadu
அ.தி.மு.கவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக பார்க்கிறோம் : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
சென்னை கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் CMDA சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், 'மக்கள் சேவை மையம்' ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” வட சென்னை மக்களின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. சில சமூக விரோதிகளால் இந்த இடம் ஆக்கிரமிப்பு உள்ளாக இருந்ததை தடுத்து இந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அழிந்து கொண்டிருக்கும் கட்சிதான் அதிமுக. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக அழித்துவிட்டார். அதிமுகவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை. உதிரியாகத்தான் பார்க்கிறோம்.
அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு தமிழக மக்கள் அவருக்கு தோல்வி என்ற தொடர் பரிசை கொடுத்து வருகிறார்கள். அதேநேரம் நின்ற தேர்தலில் எல்லாம் வெற்றையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வருகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு நிச்சயம் 200 தொகுதிக்கு மேல் தி.மு.க வெற்றி பெறும். மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும். இதை நாளைய வரலாறு சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!